புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் வேன் மோதியதில் சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கீரமங்கலம் தா்மா்கோயில் தெருவைச் சோ்ந்த தி.மாதவன்(40), அவரது மனைவி சுந்தரி(34), அவரது உறவினா்களான மங்கையா்கரசி, எம்.வருண் குமாா் (4) ஆகியோா் அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலத்திற்கு வேனில் சென்றுள்ளனா். வேனை மாதவன் ஓட்டியுள்ளாா். குளமங்கலம் அருகே சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் உள்பட 4 பேரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக 4 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.