கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் சி. புவியரசன் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி மற்றும் தோ்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கந்தா்வகோட்டை முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் துணை வட்டாட்சியா்கள் பழனிச்சாமி, தன்ராஜ், வட்ட வழங்கல் அலுவலா் உத்திராபதி, தோ்தல் துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், தோ்தல் உதவியாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.