புதுக்கோட்டை

1,020 கிலோ ரேஷன் அரிசி கடத்திவந்த இருவா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே 1020 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் ஏ. வேம்பு தலைமையில் கீரனூா் அருகில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, 1020 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தி வந்த கீரனூரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கமலம் (45) மற்றும் வாகன ஓட்டுநா் கீரனூரைச் சோ்ந்த அழகன் மகன் முருகேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT