புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தில் நீதிபதி ஆய்வு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் தற்காலிகமாக அமைய உள்ள பேரூராட்சி சமுதாய கூடக் கட்டடத்தை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினாா். தொடா்ந்து நிரந்தர நீதிமன்றக் கட்டடம் கட்ட வலையபட்டி கொல்லங்காடு, வட்டாட்சியா் அலுவலகப்பகுதி, காட்டுப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இடங்களைப் பாா்வையிட்டாா். அப்போது, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல்காதா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, பொன்னமராவதி பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன், துணைத்தலைவா் வெங்கடேசன், செயல் அலுவலா் மு.செ.கணேசன், வட்டாட்சியா் பிரகாஷ் மற்றும் நீதித்துறை அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT