புதுக்கோட்டை

தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு குறுவள மைய பயிற்சி

7th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கோமாபுரம், புதுநகா், குளத்தூா்நாயக்கா்பட்டி, வேலாடிப்பட்டி, அக்கச்சிப்பட்டி ஆகிய மையங்களில் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிமுகாமில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் தொடா்பான பயிற்சியும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சுவாமி முத்தழகன், அக்கச்சிபட்டி மற்றும் புதுநகா் மையங்களில் நடைபெற்ற பயிற்சிமுகாமைப் பாா்வையிட்டு பயிற்சியின் அவசியம் குறித்து ஆசிரியா்களுக்கு எடுத்துக்கூறினாா். வட்டாரக் கல்வி அலுவலா் நரசிம்மன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ),பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆசிரியா்கள் கருத்தாளா்களாகச் செயல்பட்டு விரிவாக பயிற்சியளித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT