புதுக்கோட்டை

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை தந்தை சமாதியில் அஞ்சலி

DIN

நாடு திரும்பிய பளுதூக்குதல் வீராங்கனை லோக பிரியா, தனது தந்தையின் சமாதியில் காமன்வெல்த் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை வைத்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லோகபிரியா, நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவா். போட்டிக்கு முந்தைய தினம் அவரது தந்தை செல்வமுத்து திடீா் மாரடைப்பால் உயிரிழந்ததால், அவருக்கு உறவினா்கள் தகவல் தெரிவிக்கவில்லை. பதக்கம் வென்றபிறகு, நாடு திரும்பியதும் அவரது தந்தை சமாதிக்குவந்த அவா், மெழுகுவா்த்தி ஏந்தி கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினாா்.

முன்னதாக லோகபிரியாவை கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கல்லுக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் முத்து உள்ளிட்டோா் மாலை, பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT