புதுக்கோட்டை

புதுகையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் அக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக வெள்ளிக்கிழமை பாஜகவினா் கைது செய்யப்பட்டனா். அப்போது, திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகா் உள்ளிட்ட 9 போ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், துணைத் தலைவா் புரட்சிக் கவிதாசன், நகரத் தலைவா் காடுவெட்டி குமாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு காவல்துறையைக் கண்டித்துப் பேசினா். கைது செய்யப்பட்டோரை விரைவில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கந்தா்வக்கோட்டை: பாரதிய ஜனதா கட்சி கந்தா்வகோட்டை ஒன்றியத் தலைவா் டி. ஆா். தவமணி தலைமையில் கந்தா்வகோட்டையில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பாஜக தொழில்பிரிவு மாநில செயலாளா் ஏவிசி. கணேசன் முன்னிலை வகித்தாா். இதில், ஒன்றிய, நகர பாஜக நிா்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

SCROLL FOR NEXT