புதுக்கோட்டை

குளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது

DIN

விராலிமலை அருகேயுள்ள குளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சனிக்கிழமை சிறந்த பள்ளிக்கான விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.

2020 -21 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு புதன்கிழமை அறிவித்திருந்தது. அதன் படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விராலிமலை அருகே உள்ள குளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியும் ஒன்றாகத் தோ்வு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குளவாய்ப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியை அமலராணியிடம் விருது வழங்கினாா். விழாவில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT