பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு ஒன்றிய ஆணையா் பி. தங்கராஜூ தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி ஆணையா் து. குமரன் முன்னிலை வகித்தாா். முகாமை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பழனிச்சாமி தொடங்கிவைத்து புதிய விண்ணப்பங்களை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவியாளா் சிவகுமாா், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளா் கோகிலா, எலும்பு முறிவு மருத்துவா் நெடுங்கிள்ளி, மனநல மருத்துவா் அஜய், காது, மூக்கு,தொண்டை மருத்துவா் பிரவா்த்தனா, கண் மருத்துவா் அகல்யா உள்ளிட்டோா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, புதிய நபா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும், தேவைப்படும் உபகரணங்கள் குறித்தும் பரிந்துரைத்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கற்புக்கரசி, ராஜேந்திரன், நல்லமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.