புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் இரண்டாம், மூன்றாம் நிலை நூலகா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். சுமாா் 30 போ் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனா். பிற்பகலில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நூலகா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயா்வு தொடா்பாக ஒரு நபா் ஊதியக் குழு பரிந்துரைகளின்படி 2021இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நூலகா்களுக்கு மட்டும் புதிய ஊதிய விகிதம் அமலாகவில்லை. எனவே, நிலுவை ஊதியத்துடன் சோ்த்து புதிய ஊதிய விகிதத்தை விரைவில் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.