புதுக்கோட்டை

சிவ பிருந்தாதேவியின் 24-ஆவது குருபூஜை

DIN

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குருமுதல்வரும், முதல் பெண் ஆதீனகா்த்தருமான சாயிமாதா சிவ பிருந்தா தேவி அம்மையாரின் 24ஆவது குருபூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். மூத்த குழந்தைகள் நல மருத்துவா் எஸ். ராம்தாஸ், கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத் தலைவா் சி. கோவிந்தராசனாா், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குருபூஜைக்குப் பிறகு, அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக ஆா். மணிகண்டன் திருமுறைகள் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT