கந்தா்வக்கோட்டை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா 2 ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு, கந்தா்வக்கோட்டை வட்டார வளமையம், அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற குழு நடனம், தனிநபா் நடனம், நாட்டுப்புற செவ்வியல் நடனம், நாடகம், ஓவியம், பேச்சு நாட்டுப்புறப் பாடல் ஆகிய போட்டிகளில்,
கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினா்.
ஒருங்கிணைப்பு குழுவினா் அடைக்கப்பன், ஷ்பனம், வெங்கடேஸ்வரி, சின்னராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) பிரகாஷ், ஆசிரியா் பயிற்றுநா்கள் சங்கிலிமுத்து, சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.