புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளா்அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் ஜி.சேகா் தலைமையில் மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.1) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை மற்றும் இலுப்பூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் த. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.