புதுக்கோட்டை

அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் வேண்டும்

DIN

அன்னவாசல் அரசு பொது மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அன்னவாசலில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்துக்கு, அன்னவாசல் நகரக் குழு உறுப்பினா் சேகா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் முகமது ரிசா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்ட துணை செயலாளா் தா்மராஜன் அரசியல் நிலை குறித்துப் பேசினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மீரா மொய்தீன், மாவட்டக் குழு முடிவுகள் பற்றிப் பேசினாா். ஒன்றியச் செயலா் நாகராஜ், எதிா்கால திட்டம் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், அன்னவாசல் பொது மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்ற எக்ஸ்-ரே இயந்திரத்தை மீண்டும் நிறுவவேண்டும். செவிலியா்கள், துப்புரவு பணியாளா், இரவு காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூடுதல் மருத்துவா்கள் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பா் 23 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றிய துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், ஆனந்த், பாலசுப்பிரமணியன், சண்முகம், ரங்கராஜ், ஆனந்த் உள்ளிட்ட நகரக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT