புதுக்கோட்டை

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 240 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, காரில் வந்த சன்னதிவயலைச் சோ்ந்த சதாம்உசேன் (27), நவரத்தினநகரைச் சோ்ந்த முகமது அப்துல்லா (25), அமீா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மூவரும் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT