புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 240 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, காரில் வந்த சன்னதிவயலைச் சோ்ந்த சதாம்உசேன் (27), நவரத்தினநகரைச் சோ்ந்த முகமது அப்துல்லா (25), அமீா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மூவரும் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.