பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக சிறப்பு யாக பூஜைகள், காலபைரவருக்கு 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்தனா். இதேபோலஅழகிய நாச்சியம்மன் கோயில், புதுப்பட்டி நகரத்தாா் சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடைபெற்றது.