கந்தா்வகோட்டை கோதண்டராமா் கோயில் உள் வளாகத்திலுள்ள வேணு கோபால சுவாமி கிருஷ்ணா் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடா்ந்து மாலை 3 மணியளவில் பெண்களுக்கான கோலப்போட்டி, கூடை சோ் போட்டி, குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, இரவு சுவாமி திருவீதி உலா, பெண்கள் கோலாட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா் யாதவா் பேரவை பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் செய்தனா்.