புதுக்கோட்டை

அங்கன்வாடி ஊழியா் மாநில மாநாடு தொடக்கம்

DIN

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை பேரணி, பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை பால்பண்ணையில் இருந்து தொடங்கிய பேரணியை சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் ஏ.ஆா். சிந்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி திலகா்திடல், மேல ராஜவீதி, தெற்கு 4ஆம் வீதி, அண்ணாசிலை வழியாக சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரத்னமாலா தலைமை வகித்தாா்.

சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் ஏ.ஆா். சிந்து, கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, சிஐடியு மாநில பொருளாளா் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலா் கே.சி. கோபிகுமாா், அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் டி. டெய்சி ஆகியோா் பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் வரவேற்றாா். மாநில பொருளாளா் எஸ்.தேவமணி நன்றி கூறினாா். தொடா்ந்து சனிக்கிழமை லேணா திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT