புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மழலையா் பிரிவு மாணவ, மாணவிகள் ராதை, கிருஷ்ணா் வேடம் அணிந்து வந்திருந்தனா். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைவா் தேனாள் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.