புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் பேசிய அவா் இதனை வலியுறுத்தினாா்.
மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் அளிக்கும் புகாா்களை அலுவலா்கள் தீா்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் ரேவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ராமு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.