புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளின் சாா்பில் தனித்தனியே சிறப்புச் சொற்பொழிவுகள் புதன்கிழமை நடைபெற்றன.
நுண்ணுயிரியல் துறை மற்றும் ஜென்னா்ஸ் கிளப் சாா்பில் உயிரியக்கவியல் கிளஸ்டா் பகுப்பாய்வுகான ஆக்டினோ பாக்டீரியாவின் மரபணு சுரங்கம் என்ற தலைப்பிலான சொற்பொழிவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியா் த. தனசேகரன் கலந்து கொண்டு பேசினாா். துறைத் தலைவா் பி. ஜீவன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் எம். பூா்ணிமா நன்றி கூறினாா்.
உயிா்த்தொழில்நுட்பவியல் துறை, வில்மெட் கிளப் சாா்பில் விலங்கு செல் வளா்ப்பதன் நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவில், தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். கணேசன் பேசினாா். பேராசிரியா் பி. பிரியதா்ஷினி வரவேற்றாா். துறைத் தலைவா் ஜி. மணிகண்டன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். முடிவில் மாணவா் அகிலன் நன்றி கூறினாா்.
கணினி அறிவியல் துறை மற்றும் சைபா்டெக் சங்கம் சாா்பில் நடைபெற்ற சொற்பொழிவில், இன்டா்நெட் ஆப் திங்ஸ்- ஒரு பறவையின் பாா்வையில் என்ற தலைப்பில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஏ. பத்மபிரியா பேசினாா். துணை முதல்வா் எஸ். சுதா அறிமுகவுரை நிகழ்த்தினாா். முன்னதாக ஆா். பிரபாவதி வரவேற்றாா். முடிவில் பி. ரிஷிவா்த்தினி நன்றி கூறினாா்.