ஆலங்குடி அருகே சுமை ஏற்றும் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்
ஆலங்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் கலிபுல்லா நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஏற்றும் வேனில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, வாகனத்தோடு அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மழையூரைச் சோ்ந்த அ.கோவிந்தசாமியை (44) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.