நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாளையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் தேசியக் கொடிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் செல்வம் அழகப்பன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக்கவிதாசன் முன்னிலை வகித்தாா். பாஜக பிரமுகரும், திரைக்கலைஞருமான கௌதமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி அருகேயிருந்து தொ டங்கிய இந்தக் கொடிப் பேரணி, புதிய பேருந்து நிலையம் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. மாவட்ட பாஜகவின் ஓபிசி அணியினா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். இதில், ஏராளமான பாஜகவினா் தேசியக் கொடிகளுடன் கலந்து கொண்டனா்.