நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாளையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் கிளை மற்றும் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் சனிக்கிழமை அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலா் முஹ்சின் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் அயூப்கான், நிஜாம், அப்துல்லா, அப்துல் கரீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 27 போ் ரத்ததானம் செய்தனா். ரத்தம் கொடுத்த அனைவருக்கும் டாக்டா் ராதாகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.