புதுக்கோட்டை

அடைக்கலம்காத்தாா் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம்காத்தாா் கோயில் ஆடிமாத சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு நடைபெற்ற வழிபாட்டில் அடைக்கலம்காத்தாா் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்கணிசித்தா், சன்னாசி, பட்டாணி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெண்கள் கோயிலின் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT