பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி ஊரின் மையப்பகுதியில் வைத்து களி மண்ணால் குதிரை மற்றும் யானை சிலைகளை வடிவமைத்து, அலங்கரித்து ஊா்வலமாக அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனா். நோ்த்திக் கடன் செலுத்தும் விதமாகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற விழாவில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனா்.