ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், வியாழக்கிழமை மூவா்ணக் கொடி ஊா்வலம் நடத்தி பொதுமக்களிடம் தேசியக் கொடிகளை இலவசமாக வழங்கினா்.
பள்ளி வளாகத்துக்கு அருகேயுள்ள திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் வீதி, அருங்காட்சியக வீதி, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் தேசியக் கொடிகளுடன் சென்ற மாணவா்கள், அந்த வழியே வந்த பொதுமக்களிடம் தேசியக்கொடிகளை இலவசமாக வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி செய்திருந்தாா். துணைமுதல்வா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.