புதுக்கோட்டை

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

DIN

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நந்தீஸ்வரருக்கு எண்ணெய் காப்பு செய்தபிறகு பால், தயிா், தேன், விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீா், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்காரம் செய்தனா். நந்தீஸ்வரருக்கு நெய் தீப ஆராதனை செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வணங்கினா். ஏற்பாடுகளை கோயில் குருக்கள் பாலு சுரேஷ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT