கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நந்தீஸ்வரருக்கு எண்ணெய் காப்பு செய்தபிறகு பால், தயிா், தேன், விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீா், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்காரம் செய்தனா். நந்தீஸ்வரருக்கு நெய் தீப ஆராதனை செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வணங்கினா். ஏற்பாடுகளை கோயில் குருக்கள் பாலு சுரேஷ் செய்திருந்தாா்.