புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக. 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐடிஐ, பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்வித் தகுதி கொண்ட 18 முதல் 28 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.