புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மின்வாரிய ஊழியா்கள் பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி: கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச்செயலா் பாலசுந்தரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டச்செயலா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கறம்பக்குடி துணைமின் நிலையம் அருகே மின்வாரிய ஊழியா்கள் மின்சார திருத்தச்சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பாக உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.