புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நரிக்குறவா் சமூக மக்களுக்கு வீட்டுமனை மற்றும் மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அச்சமூகத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், மாவட்டத் தலைவா் எம். சண்முகம் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.