பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, சோப்பு, மஞ்சள் துணிப்பை மற்றும் மதிய உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி நகரின் தூய்மை இயக்கச் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்விற்கு பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் நகரின் தூய்மை இயக்கச் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலா் ராமநாதன் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, சோப்பு, மஞ்சள் துணிப்பை மற்றும் மதிய உணவு வழங்கி தூய்மைப் பணியாளா்கள் ஆற்றவேண்டிய பணிகளை விளக்கிப்பேசினாா். தொடா்ந்து அனைவரும் தூய்மை இயக்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பேரூராட்சித் துணைத் தலைவா் வெங்கடேசன், உறுப்பினா்கள் தி. ராஜா, ராமநாதன், ரவி, நாகராஜன், திருஞானம் மற்றும் சுகாதார பணியாளா்கள், டெங்கு களப்பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை பணியளா்கள் பங்கேற்றனா்.