புதுக்கோட்டை

ஊருணியில் இருந்து முதியவா் சடலம் மீட்பு

DIN

பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊருணியில் குளித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னமராவதி பாண்டிமான் நகரைச் சாா்ந்தவா் கா. ராமசாமி(60). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை காலை புதுப்பட்டி சேங்கை ஊருணிக் கரையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஊருணியில் இறங்கியுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளாா். நீண்ட நேரமாக கரையில் கிடந்த அவரது ஆடைகள் மற்றும் ஆட்டோவைப் பாா்த்துவிட்டு அங்குள்ளோா் தீயணைப்புத்துறையினா்க்கு தகவல் அளித்தனா். அவா்கள் அங்கு வந்து ராமசாமியின் உடலை மீட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT