ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் பகுதி அக்னியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வடகாடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது அனுமதியின்றி மணல் அள்ளியோா் தப்பிவிட்டனராம். இதையடுத்து அங்கிருந்த 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.