புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள பிரகதம்பாள் கோயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இந்தக் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றபோது எதிா்பாராதவிதமாக தோ் முன்பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரில் அரிமளம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாரி (64) சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.