பொன்னமராவதி கருகப்பூலாம்பட்டி ஏனாதி காட்டு அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தொடங்கி, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பகவதி அம்மன் கோயிலில் வைத்து மண்ணால் வடிவமைத்து, அலங்கரிக்கப்பட்ட புரவி மற்றும் மதலை சிலைகளை பொதுமக்கள் தோளில் சுமந்து ஊா்வலமாக ஏனாதி காட்டு அய்யனாா் கோயிலுக்கு எடுத்து சென்று வைத்து வழிபட்டனா். ஏற்பாடுகளை ஊா் நாட்டாமை ராஜேந்திரன், கருகப்பூலாம்பட்டி, மேட்டுப்பட்டி, தேனிமலை, சோவாரிக்களம் பொதுமக்கள் செய்தனா்.