அறந்தாங்கி கராத்தே பிரதா்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 23ஆவது ஆண்டு விழாவின் தொடக்கமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட கலைத்திறன் போட்டிகள் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அறக்கட்டளைத் தலைவா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் எம்.ஜி..ராஜா, பொருளாளா் சு. விஸ்வமூா்த்தி, இணைச் செயலா் ப. காா்த்திகேயன், துணைச் செயலா் சி. காசிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளா் ம. தினேஷ்குமாா் கலைத்திறன் போட்டிகளைத் தொடங்கி வைத்து, ஓவியா் ஜேம்ஸ் ஒருங்கிணைத்திருந்த ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இதில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அறந்தாங்கி நகா்மன்றத்தலைவா் இரா. ஆனந்த் பரிசுகளை வழங்கினாா்.