புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 624 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 19,392 பேருக்கும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 19,262 பேருக்கும் என மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.