புதுக்கோட்டை

நகைக்கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும்

DIN

தமிழக அரசு அறிவித்த 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை பாரபட்சமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கட்சி நிா்வாகி செல்வராசு தலைமையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் மாவட்டச்செயலா் மு.மாதவன் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களில் நீடிக்கும் குழப்பங்களைக் களைந்து நகைக் கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்தவேண்டும். பேரூராட்சிப் பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றியச்செயலா் ஆா்.சொா்ணக்குமாா், துணைச்செயலா் எம்.செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT