புதுக்கோட்டை நகரக் கூட்டுறவு வங்கி சாா்பில் 39 பேருக்கு ரூ. 12.35 லட்சம் மதிப்பில் சிறுவணிகக் கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி கலந்து கொண்டு சிறுவணிகா்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் என். அண்ணாதுரை, வங்கியின் மேலாண்மை இயக்குநா் எஸ். சங்கீதா, பொதுமேலாளா் எஸ் மெய்யா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.