பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அயோடின் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வில், அயோடின் குறைபாட்டினைக் குறைப்போம், தைராய்டு பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை மருத்துவா்கள் ஏற்றுக்கொண்டனா். மேலும் அயோடின் உப்பை தினந்தோறும் சோ்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் குறைபாடு இல்லாத வளமான வாழ்வு வாழ வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், மருத்துவா் அருண்குமாா், தமிழ்ச்செல்வன், காா்த்திக் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.