புதுக்கோட்டை

பழுதடைந்த சாலைகளை செப்பனிடக் கோரிக்கை

DIN

அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை உள்ளாட்சி அமைப்பினா் முழுமையாக சீரமைத்துத் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுப்பிரமணியபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் போஸ் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா்கள் ராஜேந்திரன், கே.ஆா். தா்மராஜன், ஒன்றியச் செயலா் முத்துசாமி உள்ளிட்டோஒஈ பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவுச்சங்கங்களில் கடன் தொகை நிலுவையில் இருந்தாலும் உடனடியாக இந்த ஆண்டுக்கான பயிா்க் கடன் வழங்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் உரம் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT