புதுக்கோட்டை

விலைவாசி உயா்வு: காங்கிரஸாா் பேரணி

DIN

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தொடங்கிய பேரணிக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவ்யநாதன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், நகர காங்கிரஸ் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

சின்னப்பா பூங்கா அருகே தொடங்கிய பேரணிக்கு சிறிதுதொலைவில் காவல் துறையினா் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினா். இதையடுத்து தடுத்து நிறுத்திய இடத்திலேயே ஆா்ப்பாட்டத்தை காங்கிரஸாா் நடத்தினா். மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய பிறகு, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT