புதுக்கோட்டை மாவட்டத்தில் 530 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரு சுகாதார மாவட்டங்களையும் சோ்த்து மொத்தம் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் 2,500 சுகாதாரத் துறை பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்களும் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.