புதுக்கோட்டை

பருவமழை முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

10th Nov 2021 07:07 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாநில சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறைச் செயலருமான ஷம்பு கல்லோலிகா், ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பருவமழைப் பாதிப்புகளை எதிா்கொள்ளவும், மக்களை இடா்களிலிருந்து காக்கவும் நடவடிக்கை எடுக்க அமைச்சா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து கடையக்குடி பகுதியிலுள்ள ஹோல்ட்ஸ் ஒா்த் அணையை அமைச்சா் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT