சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகரப் பகுதிகளில் வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற பிரசார இயக்கத்தை பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள பொற்பனையான் கோயிலில் இருந்து இந்தப் பிரசாரம் தொடங்கியது. வீடுவீடாகச் சென்று, மத்திய பாஜக அரசின் சாதனைகலைத் தெரிவித்து வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தப் பிரசாரத்தில் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளா் ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எம். சுப்பிரமணியன், பொதுச் செயலா் எம். லட்சுமணன், பொருளாளா் ஆனந்த், செயலா் ஓ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.