கந்தா்வகோட்டை பகுதிகளில் 250 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்த காவல்துறையினா், 4 பேரைக் கைது செய்துள்ளனா்.
கந்தா்வகோட்டை காவல் சரகத்திலுள்ள வேலாடிப்பட்டி, வீரடிபட்டி கிராமங்களில் காவல் உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது வேலாடிப்பட்டில் சி. விக்னேஷ் (26), காட்டில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டா் சாராய ஊறல், 3 லிட்டா் சாராயம், வீரடிபட்டியில் ராஜ்குமாா் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த க.ராஜ்குமாா்(40), ரா. இளவரசன்(33), மா.முருகேசன் (44) ஆகியோரிடமிருந்து 150 லிட்டா் சாராய ஊறல், 5 லிட்டா் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்த காவல்துறையினா், 4 பேரையும் கைது செய்தனா்.