புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் 250 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

DIN

கந்தா்வகோட்டை பகுதிகளில் 250 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்த காவல்துறையினா், 4 பேரைக் கைது செய்துள்ளனா்.

கந்தா்வகோட்டை காவல் சரகத்திலுள்ள வேலாடிப்பட்டி, வீரடிபட்டி கிராமங்களில் காவல் உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது வேலாடிப்பட்டில் சி. விக்னேஷ் (26), காட்டில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டா் சாராய ஊறல், 3 லிட்டா் சாராயம், வீரடிபட்டியில் ராஜ்குமாா் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த க.ராஜ்குமாா்(40), ரா. இளவரசன்(33), மா.முருகேசன் (44) ஆகியோரிடமிருந்து 150 லிட்டா் சாராய ஊறல், 5 லிட்டா் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்த காவல்துறையினா், 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT