கந்தா்வகோட்டை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு மஞ்சள் , திரவியம், பால், பன்னீா் , பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பொங்கல், கொண்டைக்கடலை பிரசாதமாக வழங்கப்பட்டது.