புதுக்கோட்டை

கெளரவ விரிவுரையாளா்கள் 3 மாத சம்பளம் வழங்கக் கோரிக்கை

DIN

கடந்த 3 மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்க வேண்டும் என அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் சுமாா் 4,084 கெளரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் வரை சம்பளமாக மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், கடந்த 3 மாதங்களாக சம்பளம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனா். எனவே, மேலும் கால தாமதமின்றி சம்பளம் வழங்க வேண்டும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா். இதுகுறித்து கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் கூறுகையில், கரோனா கால சூழலில் மாணவா் சோ்க்கை, இணைய வழி வகுப்பு, அக மதிப்பீட்டு மதிப்பெண் வழங்குதல், தோ்வு நடத்துவது ஆகிய பணிகளை செய்து வருகிறோம். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுதோறும் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும். ஆனால், அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கு விடுமுறையைக் காரணம் காட்டி சம்பளம் வழங்கப்படாது. நிகழாண்டு கரோனா காலத்தில் மே மாதத்திலும் பணிபுரிந்துள்ளதால் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கும் மே மாத சம்பளம் உள்பட அனைத்து கெளரவ விரிவுரையாளா்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT