விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை அருகிலுள்ள பேராம்பூா் கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் வீ. திருமலை(62). ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான இவா், விராலிமலைக்கு வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா்.
குளத்தாத்துப்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.